Sunday, July 21, 2019

சூரியன் என்ன செய்கிறார் அதற்கு நேர்மாறாக சனி செயல்படுவது ஏன்?

திருஷ்டி உருவாக காரணம் சூரியன்

திருஷ்டி மூலம் கஷ்டத்துக்கு ஆளாக்குவது சனி

சூரியனுக்கும் சனிக்கும் ஆகாது இதை இந்து மத ரீதியாக புராண கதைகள் மற்றும் ஆகம சித்தாந்த நூல்களும் இருக்கின்றன,

ஜோதிட ரீதியாகவும் இவ்விருவருக்கும் ஆகாது சனி கொடுக்கும் துன்பம் எல்லையற்றது,,

சூரியன் என்ன செய்கிறார் அதற்கு நேர்மாறாக சனி செயல்படுவது ஏன்?

சூரியன் என்றாலே ராஜா ,,ராஜா என்றால் அதிகாரம் அதிகாரம் கையில் இருந்தால் திமிர் வரும்,, ஆணவம்,, வரும் கர்வமும் வரும்,,

இதற்கு நேர்மாறாக சனி திமிர்,, ஆணவம்,, கர்வம், தலைக்கனம்,, அகங்காரம்,, எல்லாம் ஒடுக்கி அசிங்க படுத்ததல் அவமான படுத்துதல், வெட்கி தலை குனிய வைத்தல்,, பிறரிடம் கையேந்தி நிற்றல் இதைத்தான் சனி செய்கிறார் மறுக்க முடியாதது,,

நீ ராஜாவாக இருந்து ஆட்சி செய் திமிர், கர்வம் ஆணவம், தலைக்கனம்,, இல்லாதவனாக இருந்து ஆட்சி செய்துகொள் இதுவே சனியின் எதிர்பார்ப்பு,,
அடிமைகளிடம் தொழிலாளிகளிடம் ,ஏழைகளிடம் உன் அதிகாரத்தை செலுத்தாமல் இரு என்பதே சனியின் எதிர்பார்ப்பு,,

நம்மை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தி பேசுவது மூலம் நமது தலைக்கனம், திமிர் மற்றவர்க்கு புரிந்து விடும்,,, இதுதான் கண் திருஷ்டி விழும் என்பார்கள்,, அது அல்ல சனி பிடிக்க போகிறார் என அர்த்தம்,,

கண் திருஷ்டி விழுந்துவிடும் தலை சுத்தி போடணும் என்று வத்தல் மிளகு வைத்து வீட்டின் முற்றத்தில் கொழுத்துவோம் வத்தல் மிளகு யார் ??சூரியன்,,(திமிர் அதிகாரம் கர்வம் ஆணவம்)
கண் திருஷ்டி பரிகரம் மூலம் முன்னோர்கள் சனியிடம் தப்பித்து வாழ்ந்தவர்கள் என்று புலனாகிறது,,
அந்த திருஷ்டி வெளியேற இன்றளவும் இரவு தூங்கும் முன் கற்பூரம் மிளகு வத்தல் வைத்து நம்மை 3முறை திருஷ்டி கழிக்கும் முறை பின்பற்ற பட்டது இப்போது குறைந்தது,,

உப்பு(சந்திரன், மனம்)
மிளகு, வத்தல்(சூரியன்)
என் மனதில் உள்ள சூரிய காரகத்துவம் கொண்ட திமிர், ஆணவம்,, தலைக்கனம், கர்வம்,, பந்தா,, இவை எல்லாம் வீட்டின் வெளியிலே வைத்து எரித்துவிடுகிறேன் சனியே என்னை வாழ விடு,,
இதுவே கண்திருஷ்டி கழிப்பதின் உள்நோக்கம்,,
வீட்டில் கூட மொட்டை மாடியில் மண்பானையில் வெள்ளை பெயிண்ட் அடித்து அதில் கருப்பு(சனி) புள்ளிகள் வைப்பார்,,,மற்றும் ஒரு அரக்கன் மாதிரி படம், பொம்மை கூட வைப்போம் இது சனி மகன் மாந்தி
குழந்தை க்கு கன்னத்தில் கருப்பு மை(சனி)இடுவார்கள்,, நாம் அணிந்திருக்கும் அரைஞாண் கயிறு கருப்பு(சனி) இவை எல்லாம் திருஷ்டி கழிக்க தான் ,,,பிறர்கண் விழகூடாது என்ற நோக்கத்தில் பின்பற்ற பட்டவை, இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு
முன்னோர்கள் பின்பற்ற்றிய நம்பிக்கைகளில் மருத்துவமும் அடங்கியுள்ளது, கிரகங்களிடம் இருந்து பாதுகாத்துகொள்ளும் வழிமுறையும் அடங்கியுள்ளது,,சனிக்கு பிடித்தவை செய்யும் போது ஓரளவு பாதிப்புகள் இல்லாமல் இருக்கலாம் என்ற நோக்கத்தில் இப்பபதிவு,,,

சில நாட்கள் முன்பு நண்பர் செல்வா அவர்கள் ஒரு பதிவு இட்டு இருந்தார் அது: சுய ஜாதத்தில் சனி இருக்கும் பாவகம் பற்றி வெளியே பேசக்கூடாது அதாவது சனி நின்ற வீட்டில் கொடுக்கும் பலன்களை பற்றி வெளியில் பேச கூடாது, இதுவும் ஒரு வகை திருஷ்டி தான்,,சனிகொடுக்கும் நல்ல பலன்கள் பற்றி வெளியில் பேசுவதால் அந்த பலன் நாளடைவில் இல்லாமல் போகிறது என்பது மிகவும் உண்மை,,,திருஷ்டி படாமல் வாழகற்று கொள்வோம்