கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, July 26, 2019
நட்சத்திர பதிவு:பூராடம்:
குருவின் ராசியாகிய தனுசுவில் முழுமையாக அமைய பெற்ற சுக்கிரனின் நட்சத்திரம் தான் பூராடம் ஆகும்.
சந்திரன் குருவின் ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நிற்கும் போது ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும்.இவர்கள் மிகவும் இனிமையானவர்கள் என்று.திருவள்ளுவர் கூற்றுப்படி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தால் என்பதற்கு ஏற்ப உலகை அன்பால் மட்டுமே ஆட்கொள்ள முடியும் என்பதை முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள்.
அன்பு என்றால் அது காதல் என்று மட்டும் அர்த்தம் அல்ல. உலகை இயக்கும் அந்த பரம்பொருளின் மீதான அன்பும் உலகில் காண்பதை எல்லாம் அன்பு செலுத்துவதும் தான்.அதனால் தான் என்னவோ இவர்களுக்கு நிறைய இறை நம்பிக்கை இருக்கும்.
பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கான கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள கடுவெளி என்னும் ஊரில் உள்ள ஆகாச புரீஸ்வரர் ஆலயம் ஆகும்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.
கடுவெளிச் சித்தருக்கு இறைவன் காட்சி அளித்த தலமாக விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைய பெற்றுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.ஜென்ம நட்சத்திரம் நாளில் வணங்கி வழிபட்டு வருவது நல்லது.
நன்றி.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...