Friday, July 26, 2019

நட்சத்திர பதிவு:பூராடம்:



குருவின் ராசியாகிய தனுசுவில் முழுமையாக அமைய பெற்ற சுக்கிரனின் நட்சத்திரம் தான் பூராடம் ஆகும்.

சந்திரன் குருவின் ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நிற்கும் போது ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும்.இவர்கள் மிகவும் இனிமையானவர்கள் என்று.திருவள்ளுவர் கூற்றுப்படி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தால் என்பதற்கு ஏற்ப உலகை அன்பால் மட்டுமே ஆட்கொள்ள முடியும் என்பதை முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள்.

அன்பு என்றால் அது காதல் என்று மட்டும் அர்த்தம் அல்ல. உலகை இயக்கும் அந்த பரம்பொருளின் மீதான அன்பும் உலகில் காண்பதை எல்லாம் அன்பு செலுத்துவதும் தான்.அதனால் தான் என்னவோ இவர்களுக்கு நிறைய இறை நம்பிக்கை இருக்கும்.

பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கான கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள கடுவெளி என்னும் ஊரில் உள்ள ஆகாச புரீஸ்வரர் ஆலயம் ஆகும்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.

கடுவெளிச் சித்தருக்கு இறைவன் காட்சி அளித்த தலமாக விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைய பெற்றுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.ஜென்ம நட்சத்திரம் நாளில் வணங்கி வழிபட்டு வருவது நல்லது.

நன்றி.