Sunday, July 7, 2019

ஜாதகப்படி யாருக்கு எளிதில் கடன் கிடைக்கும்.



இன்று நாம் Modern உலகிகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் அனைவருக்கும் வங்கியிலிருந்து போன் செய்து Home loan, credit card வேணுமா என்று வங்கிகளே அழைக்கும் காலமிது

அடுத்த வீட்டுகாரன் ஆடி கார வாங்குனா எதிர்த்த வீட்டுகாரன் இடிச்சுக்கு நிற்கிறான்.

அத்தியவசிய தேவைக்கு கடன் வாங்குவதை விட ஆடம்பரத்திற்கு கடன் வாங்கும் நிலை வந்து விட்டது.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.

கடன் எந்த ரூபத்திலும் பிரச்சனையே.

கடன் என்னும் நரக குழியில் விழுந்து வாழ்க்கையை இழந்து ஊரை விட்டு,உலகத்தை விட்டு போகும் நபர்களை தினசரி பார்க்கிறோம்.

ஜாதகப்படி 6 மிடம் ருண (கடன் ஸ்தானம்)

2 மிடம் தன ஸ்தானம்.

11 லாப ஸ்தானம்

2,11மிடம் கெட்டு 6மிடம் வலுத்தால் கடனில் சிக்குவர்.

சிம்ம லக்னத்திற்கு புதன் கெட்டு ,6ல் சனிஆட்சி பெற்று திசை நடந்தால் 200% கடன் உண்டு.

6ம்பதி 11 ல் இருந்தால் வங்கிகளே Wanted ஆ வந்து கடன் கொடுக்கும்.

இந்த கடனை 2,11ம்பதி,லக்னாதிபதி, கெட்டவர்கள் வாங்கினால் ஆடு கசாப்பு கடையில் கதகளி ஆடினால் என்னாகும் என்பது போல பலிபீடத்தில் தலை வைத்த கணக்காகிவிடும்.

6ம் பதி 6ல் பலம் பெற்று லக்னாதிபதி 8,12ல் மறைந்து 2ம்பதி கெட்டால் கடனுக்காகக ஊரை விட்டு ஓடும் நிலை உண்டு.

இந்த அமைப்புடன் லக்னாதிபதி ,பாவிகளுடன் கூடி மாரக ஸ்தாதானத்தில் நின்று திசை நடத்தினால் கடனுக்காக உயிரை மாய்க்கும் நிலையும் ஏற்படும்.

Credit card மோகம் இன்றைய காலத்தில் எளிதில் கடனில் சிக்க வைக்கிறது.

லக்னாதிபதி 2,5,9,11வலுப்பெற்று 6 க்குடையவன் 2 அல்லது 11ல் இருந்தால் கடன் வாங்கி கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

வங்கிகளுக்கே நாமத்தை போடும் பலே கில்லாடிகள் இவர்களே.