Tuesday, July 16, 2019

விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன?




(பரிகாரமில்லாத அனுபவித்து தீர்க்க வேண்டிய தோஷம்.)

நமது தமிழ்நாட்டில் ,நாம் வாழும் கலாசாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் நடந்துவிட வேண்டும்.

அதிலும் பெண் என்றால் 17 வயதில் +2 முடித்து டிகிரிக்கு ஒரு 4வருடம்.21 வயதில் திருமணம்.22 வயதில் குழந்தை இருக்க வேண்டுமென சமூகம் நினைக்கிறது.

படிக்கும் போதே பாதி பேருக்கு திருமணம் நடந்துவிடுகிறது.

அப்போதுதான் அப்பெண்ணிற்கும் ,அவளை பெற்ற பெற்றொருக்கும் நிம்மதி.

வயது ஏற ஏற பெண்ணுக்கும், பெண்ணை பெற்றோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிது.

இது ஒருபக்கம் இருந்தாலும் சொந்தக்காரர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்கள் கேள்வியாலே அவர்களை கொன்றுவிடுகின்றனர்.

ஜாதகத்தில் 1,2,7,8,12.இந்த இடங்கள் கெட்டு,குரு,சுக்ரனும் கெட்டு இருந்தால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணகாது.ஆனாலும் நிலைக்காது.

லக்னம், நாம் எந்த நிலையில் உள்ளோம் ,எதை அனுபவிக்க உள்ளோம் என்பதை அறிய

2ம்மிடம் குடும்பம் அமையுமா, அமையாதா என அறிய

7ம்இடம் திருமணத்தில் பிரச்சனையா, தாமத திருமணமா என அறிய

8மிடம் தாலிநிலைக்குமா? ஆயுள் பலம் அறிய.

4,12ம்மிடம் படுக்கையில் சுகமுண்டா என அறிய

சுக்ரனின் நிலையை வைத்து தாம்பத்யம் சார்ந்த நிலையை அறிய முடியும்.

குருவை வைத்து கரு உருவாகுமா என்ற அறிய முடியும்.

இவை அனைத்தும் ஒரு சில பெண்ணிற்கு, ஒரு சேர கெட்டிருக்கும்.

நாம் வாழும் சமூகத்தில் ஆண் என்பவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டாலும் யாரும் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை.

ஆனால் ஒரு பெண்ணிற்கு முதல் திருமணம் விவாகரத்து ஆனாலோஅல்லது கணவனை இழந்தாலோ அவளைச் இச்சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

பெண்ணும் ,ஆணைப்போல் மறுதிருமணம் செய்து கொண்டாலும் திருமணத்தில் சிலருக்கு பூஜ்ஜிய நிலையே அமைகிறது.

எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. இதுவே கர்மா.

எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு 19 வயதில் முதல் திருமணம் திருமணமாகி ஒரு வருடத்தில் முதல் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

21 வயதில் மற்றொரு திருமணம் ,அந்தக் கணவன் விபத்தில் இறந்தார் .

24 வயதில் மூன்றாவது திருமணம் மிகவும் வயதான, குடிகாரன் ஆன கணவன் அமைய பெற்று நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் திருமண வாழ்க்கையை ஓட்டுகிறார் .

வயது தற்போது 27 ஆனாலும் குழந்தை இல்லை கணவனுக்கு வயது 51.

ஜாதகத்தில் மேற்சொன்ன இடங்கள் ஒரு சேர கெட்டால்
அதுவே விஷகன்னிகாதோஷம்.

இவர்கள் திருமணம் செய்யாமலிருப்பது உத்தமம்.

(தை பிறந்தாச்சு திரைப்படத்தின் ஒரு நகைச்சுவை காட்சி இதை நினைவுபடுத்தும்)

ஓம் நமசிவாய