Wednesday, April 1, 2020

ராமநவமி...


#வீட்டில்_எவ்வாறு_02_04_2020
#வழிபட_வேண்டும்...

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: ஸ்ரீராமநவமி இந்நாளில், ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால்

கடன் பிரச்சனை தீரும்.
வீட்டில் செல்வம் செழிக்கும்.
மனோ தைரியம் அதிகரிக்கும்.
மனபயம் நீங்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
நினைத்த வாழ்க்கை துணை அமையும்.
எதிரிகளை வெல்லும் துணிவு கிடைக்கும்.

இனி உங்கள் முடிவு உங்கள் கையில்.
ராமநவமி வழிபாடு செய்வது அவசியமா அவசியமற்றதா என்பதை நீங்களே முடிவு
செய்து கொள்ளலாம்...

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

#ஶ்ரீராமஜெயம்... 🙏

No comments: