Wednesday, April 1, 2020

லக்னாதிபதி

லக்னாதிபதியை விட ஏழாமாதிபதி வலுக்கக்கூடாது‌.வலுத்தால் மனைவியின் ஆட்சிதான் வீட்டில். இவர் நாட்டிற்கே அரசனானாலும்,, வீட்டில் இவர் மனைவி கிட்ட இவர் அதிகாரம் செல்லுபடி ஆகாது.

எனக்கு தெரிந்த பெரிய மனிதர் ஒருத்தருக்கு ஊருக்குள்ள நல்ல மரியாதை.நல்ல செல்வந்தர். பெரிய டாண் மாதிரி ஊருக்குள்ள அதிகாரம் செலுத்துவார்.ஆனால் மனைவியிடம் இவர் பாச்சா பலிக்காது.போயா ! போ!உன் வேலையை பாத்துட்டு போ !
என்று மனைவியிடம் நல்ல மரியாதை இவருக்கு கிடைக்கும்.

லக்னாதிபதி வலுத்து இருந்து, ஏழாமாதிபதி லக்னாதிபதியை விட வலுக்குறைவாக இருந்தால் மனைவி கணவனுக்கு அடங்கியவளாக இருப்பாள். கணவன் கிழித்த கோட்டை மனைவி தாண்ட மாட்டாள்.

லக்னாதிபதியை விட ஆறாமாதிபதி வலுத்து இருந்தால் ருண,ரோக,சத்ரு எனப்படும் கடன் ,நோய், எதிரி,வம்பு வழக்குகள் வலுத்து கடன்காரனாகவும்,நோயாளியாகவும், வம்பு வழக்கு இவைகளோடு காலம் முழுவதும் வாழ வைக்கும். எனவே ஆறாமாதிபதியை விட லக்னாதிபதி வலுத்து விடவேண்டும்.. அப்போது தான் கடன் நோய் எதிரி வம்பு வழக்கு இல்லாமல் வாழ முடியும்.

நான்காம் அதிபதி ,, சந்திரன் வலுவாக இருந்து, ஏழாம் அதிபதி ,, சுக்கிரன் வலுக்குறைவாக இருந்தால் இவர்களுக்கு தாயா??தாரமா?? என்ற பிரச்சினை வரும் போது தாயின் பக்கமே நிற்பார்கள். தாய் சொல்லை தட்டாத பிள்ளை. அம்மாவுக்கு அப்புறம் தான் மனைவி எல்லாமே..

ஏழாமாதிபதி, ஏழாம் இடம்,,சுக்கிரன் வலுவாக இருந்து ,, நான்காம் இடம், நான்காம் அதிபதி,, சந்திரன் வலு குறைவாக இருந்தால் தாயா??தாரமா ?? என்றால் பொண்டாட்டி பக்கமாக சார்ந்து விடுவார்கள்.பொண்டாட்டி தாசர்கள் என்றே இவர்களை சொல்லலாம்.மனைவியின் பாதங்களுக்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆறாம் அதிபதி ,சனி , ஆறாம் இடம் வலுத்தால் அடிமைத்தொழில் தான் செய்ய வைக்கும்., ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு அடிமை தொழில் செய்ய வைக்கும்...பத்தாம் அதிபதி, பத்தாம் இடம், சூரியன் வலுத்தால்
சொந்த தொழில் செய்ய வைக்கும்.முதலாளியாக வாழ வைக்கும்.
கூட மூன்றாம் இடம் சுபத்தன்மை அடைய நிறைய ஆளடிமை வைத்து தொழில் புரிய வைக்கும்.

ஜாதகத்தில் ஒன்று,ஐந்து, ஒன்பதாம் பாவகங்கள் வலுவாக இருந்தால் லட்சுமி
கடாட்சம் உண்டாகும்.ஜாதகத்தில் திரிகோண பாவகங்களை விட 6,8,12 போன்ற துர்ஸ்தானாதிபதிகள்,துர்ஸ்தானங்கள் வலுத்தால் தரித்தரனாக வாழ வைக்கும்.வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருக்கும்.வாழ்க்கை ஒரு போர்க்களம். சாண் ஏறினால் முழம் சறுக்கும்.மிகச்சாதாரணமான வாழ்க்கையாக அமையும்.

ஏழாம் இடம்,ஏழாமாதிபதியை விட பதினொன்றாம் இடம்,, பதினொன்றாம் அதிபதி வலுத்தால் இளைய தாரம் என்று ஒன்று ஏற்படும்..

பதினொன்றாம் அதிபதி வலுக்குறைந்து
ஏழாம் அதிபதி வலுத்தால் இளைய தாரம் ஏற்பட வழியில்லை. ஏழாம் அதிபதி வலுப்பெற்று பதினொன்றாம் பாவத்தை சனி, செவ்வாய் என்ற இரண்டு பாவகிரகங்கள் பார்க்க இவருக்கு ஒரே ஒரு திருமணம் தான்..ஏகபத்தினி விரதன்.எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.

ஒரு ஜாதகத்தில் இருள் கிரகங்களான சனி, செவ்வாய் வலுக்குறைந்து ஒளிக்கிரகங்களான சூரியன், சந்திரன் வலுத்து விடவேண்டும்..எல்லாவற்றிக்கும் மேலாக லக்னாதிபதி வலுத்து விடவேண்டும்..

ஒருவரது ஜாதகத்தில் பாக்கியாதிபதி வலுத்து விட்டால் , லக்னாதிபதி அவரைவிட வலுத்து விட வேண்டும்..
இல்லாவிட்டால் என்னவாகும்??
என்று சிந்தித்து பார்த்தோமானால்
ஜாதகன் மனைவியை சம்போகத்தில் திருப்தி படுத்த முடியாது..

மனைவிக்கு காம உணர்வுகள் மிக அதிகமாக இருக்கும்.அடிக்கடி கணவனை படுக்கை அறைக்கு அழைப்பாள்.அதற்கு ஜாதகனின் லக்னாதிபதி வலுவாக இருந்தால் தான் மனைவிக்கு ஈடு கொடுக்க முடியும்.
அப்போது இவருடைய லக்னாதிபதி வலுவாக இருந்தால் மனைவியை சம்போகத்தில் திருப்தி படுத்த முடியும்.
காரணம் ஒன்பதாம் இடம் என்பது மனைவி ஸ்தானமான ஏழுக்கு மூன்றாம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நான்காம் இடம் ,நான்காம் அதிபதி கெட்டு ,, ஏழாம் இடம் ,, ஏழாம் அதிபதி வலுத்தால் ஊர் ஊராக அலைய வைக்கும்.ஒரு இடத்துல நிலையாக இருக்க விடாது. இவர்கள் நாடோடிகள்..
இதே அமைப்போடு ராகு சுபத்தன்மை அடைந்து வலுத்து,சர ராசியில் நிற்க அவருடைய தசையில் (ராகுவின்) வெளிநாடு சென்று லட்சக்கணக்கில், மில்லியன் கணக்கில் சம்பாதிக்க வைக்கும்.இவர்கள் நாடோடி மன்னர்கள்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு மிதுன லக்னம்... லக்னாதிபதி நீசம்... லக்னத்தில் சனி+செவ்வாய் சேர்க்கை...
இவருக்கு விருச்சிக ராசி... சூரியன்+புதன் மீனத்தில்.... லக்னாதிபதி, சந்திரன் , குருபகவான் என அனைத்து கிரகங்களும் கெட்டு போன நிலையில் இவருக்கு தகப்பனாரை தவிர வேறு ஆதரவு இவருக்கு இல்லை.

தகப்பனார் பல லட்சங்களுக்கு அதிபதி.இவர் தகப்பனார் அடிமை.. தகப்பனார் என்ன சொன்னாலும் கேட்பார்.. தகப்பனாருக்கு 85 வயது ஆகிறது.இப்போதும் தகப்பனாரிடம் அடி வாங்கி கொண்டு இருக்கிறார்... இவருக்கு பத்து பைசா வருமானம் இல்லை‌.. இவருக்கு லக்னம்,லக்னாதிபதி வலுவிழந்து ,
தகப்பன் காரகனான சூரியன் பத்தில் திக் பலம் பெற்று , உச்சத்தை நோக்கி ஆரோகணத்தில் சென்று கொண்டிருந்த காரணத்தினால் இவர் தகப்பனாரை சார்ந்தே இவரின் வாழ்க்கை அமைந்தது.

சுயமாக சிந்திக்க தெரியாத ,சுய முயற்சியில் வாழமுடியாத இவர் தன் தந்தைக்கு பிறகு தன் நிலை என்னவாகுமென்று அனுதினமும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்..
இரண்டு மனைவிகளும் இவரை ஏமாற்றி , பணத்தை பறித்து கொண்டு இவரை கைவிட்டு விட்டனர்.

அனைத்து உறவுகளும் கைவிட்ட நிலையில் இவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி வலுவிழந்து ஒன்பதாம் இடம் , தகப்பன் காரகன் சூரியன் நல்ல முறையில் அமைந்த காரணத்தால் நல்ல தகப்பனார் அமைந்து இதுவரையில் கஞ்சி ஊற்றி கொண்டு உள்ளார்.. இவர் தகப்பன் அடிமை.. இவருக்கு வயது 45.

No comments: