Wednesday, April 10, 2019

எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?



நாம் வீட்டில் ஏற்றும் தீபமானது வெறும் விளக்கல்ல. அது நம் மனதில் உள்ள இருளை போக்கி வெளிச்சத்தை உண்டாகும் ஒரு சக்தி. மனதில் உள்ள இருள் அகன்றாலே போதும் மற்ற அனைத்தையும் நாம் தெளிவாக செய்யமுடியும். வீட்டில் மங்கலத்தையும், லட்சுமி கடாச்சத்தையும் தரவல்ல தீபத்தை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.


கிழக்கு

கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் உள்ள பீடைகளும் துன்பங்களும் அகன்று இன்பம் பெருகும்.

மேற்கு

மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரகதோஷங்கள் நீங்கும் அதோடு கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம். வடக்கு வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.


தெற்கு

தெற்கு திசையில் விளக்கேற்றி வழிபடக்கூடாது.

விளக்கேற்றுவதற்கான சில விதிமுறைகள்:

விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றிய பிறகே திரிபோடவேண்டும். திரியை போட்டுவிட்டு எண்ணெய் ஊற்றக்கூடாது.

விளக்கில் எத்தனை திரி உள்ளதோ அத்தனை திரியையும் ஏற்ற வேண்டும். இரண்டு திரியினை சேர்த்து முறுக்கி ஏற்றுவது நன்மை தரும்.


பூவை கொண்டு விளக்கை குளிரவிடலாம். வாயால் ஊதியோ அல்லது கைகளை அசைத்தோ விளக்கை அனைக்ககூடாது. இப்படி முறையாக விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடிகொள்வாள்.