Thursday, June 13, 2019

இராமேஸ்வரம்


ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலுக்கு வெளியில் உள்ள முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் சமுத்திரமாகும்

கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.

1. மகாலட்சுமி தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்,

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்,

5. சங்கு தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்,

6. சக்கர தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் கிட்டும்,

7. சேது மாதவ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் ஸ்ரீராமபிரானால் சகலலெட்சுமி கடாட்சமும், சித்த சக்தியும் பெறலாம்,

8. நள தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் எத்துறையிலும் வல்லுனர் ஆகலாம்,

9. நீல தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடையலாம்,

10. கவாய தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மனவலிமை , தேக ஆரோக்கியம் கிடைக்கும்,

11. கவாட்ச தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள்.

12. கந்தமாதன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தி பெறுவர்,

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்,

14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயாத்ரி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்கும்,

17. சர்வ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்,

18. சிவ தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்,

19. சாத்யாம்ருத தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் ஆயுள் விருத்தி ஆகும், பிராமண சாபம் நிவர்த்தியாகும்,

20. சந்திர தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் கலையார்வம் பெருகும்,

21. சூரிய தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முதன்மை ஸ்தானம் கிடைப்பதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்,

22. கோடி தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) கிடைக்கும். இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுக்கிறது. கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.