கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, June 21, 2019
வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் !
பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளும் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடுகளில் இத்தனை தெய்வ சிலைகளை தான் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை என்பதால், பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜை அறையில் வைப்பார்கள்.
ஆனால் வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
இக்கட்டுரையில் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டிய அந்த 3 தெய்வ சிலைகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் வைத்து நன்மைப் பெறுங்கள்.
மஞ்சளால் ஆன விநாயகர் சிலை
மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். வேண்டுமெனில் வீட்டில் உள்ள மஞ்சள் பொடியை நீர் சேர்த்து கலந்து, விநாயகர் சிலையை செய்தும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
மரத்தால் ஆன விநாயகர் சிலை
ஆல மரம், மா மரம் அல்லது வேப்ப மர மரத்தாலான விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த வகையிலான தெய்வ சிலை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
சிவனின் சிலை
பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.
குறிப்பு
சிவனின் சிலையை வைப்பதாக இருந்தால், அது சிவபெருமான் தியானம் செய்வது போன்றதை தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலைத் தான் அதிகரிக்கும்
நடராஜன் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நடராஜன் சிலையை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். இது ஒருவரது மனதில் உள்ள கோபத்தை அதிகரித்து, வீட்டில் அமைதியை பாதிக்கும்.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...