Sunday, June 9, 2019

தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறியா?



அப்படி வீட்டில் அல்லது கோயிலில் பூஜைக்கு தேங்காயை உடைக்கும்போது அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது. தேங்காயில் பூ வருவது போன்ற அனைத்து விஷயத்துக்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு. அந்த வகையில் தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் கொடுத்து மனதில் குழப்பத்தை அளிப்பதால் அதை அபசகுனமாக நினைக்கிறோம்.

ஆனால் உண்மையில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்றும் அவர்களை பிடித்து இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது. எனவே இது நல்ல அறிகுறி என்று தான் கூறப்படுகிறது.

உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று பொருள். தேங்காய் உடைக்கும் போது அதில் பூ இருந்தால் அது பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு சகுனமாகக் கருதப்படுகிறது.