கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, June 12, 2019
நீங்கள் விரும்பியவரை காதலிக்க வைத்து திருமணம் செய்வதற்கு இந்தப் பரிகாரம் நன்மையளிக்கும்
பொதுவாகவே லக்னத்தின் ஐந்தாம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் இருப்பவர்களுக்கு காதல் செய்து திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள்
சுக்கிரன் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் ஆறாமிடத்தில் பன்னிரண்டாம் இடத்தில் பதினோராமிடத்தில் எட்டாம் இடத்தில் இருப்பார் இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற அதிகமான வாய்ப்புகள் உள்ளது
காதலிப்பவர்களின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்றாள் ஒரே ராசியில் லக்னங்களில் பிறந்து இருப்பார்கள் அல்லது ஐந்து ஒன்பது ராசி லக்னங்களில் பிறந்திருப்பார்கள்
தன்னுடைய நட்பு கிரகங்களுடைய ராசியில் அல்லது லக்னங்களில் பிறந்தவர்கள் ஒரே கருத்து உடையவராக இருப்பார்கள் இது காதல் மட்டுமல்ல நட்பிற்கும் ஒத்து வரும்
காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் பளபளவென வெள்ளைத்துணி வெள்ளை மொச்சை வாசனை உள்ள வெள்ளைப் பூ ஆகியவற்றைக் கொண்டு நவகிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து ஒன்பது தடவை சுற்றி வர வேண்டும்
ஓம் சுக்ராய நமஹ என 108 தடவை சொல்லி 6 வெள்ளிக்கிழமை இவ்வாறு தொடர்ந்து செய்தால் நினைப்பவர் திருமணம் செய்வதற்கு அருள் கிட்டும் முதல் வாரத்தில் மட்டும் துணி சாத்தினால் போதும் மற்ற வாரத்தில் வாசனை உள்ள வெள்ளைபூ வெள்ளை மொச்சை போதுமானது காதல் கைகூடும்
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் நன்றி
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...