Monday, November 4, 2019

எந்த_தெய்வத்துக்கு_எத்தனை_சுற்று.......



விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு.

சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.

சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.

பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.

அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.