Tuesday, November 19, 2019

வாஸ்து பகவான்



முன்பு ஒரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்தான். சிவபெருமான் மிகவும் ஆக்ரோஷமாக அண்டகாசுரனுடன் போரிட்டார் அப்போது சிவபெருமானின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி கண்ணில் பட்ட அனைத்தையும் விழுங்கியது அண்டகாசுரன் இறந்ததும் அவனின் உடலையும் உண்டது ஆனாலும் தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

இதனால் அந்த பூதத்திற்கு மூவுலகையும் அழிக்கும் சக்தி உண்டானது. இதை அறிந்த தேவர்கள் அனைவரும் பூதம் எழுந்திரிக்க இயலாதவாறு பூதத்தின் மேலேறி அமர்ந்தனர். தீராத பசி கொண்ட பூதம் பிரம்மாவிடம் முறையிட்டது. பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.