Sunday, November 17, 2019

தனுசு லக்ன பொதுப்பலன்கள்:



சூரியன்-நட்பு
சந்திரன்-சமம்
செவ்வாய்-நட்பு
புதன்-சமம்
குரு-ஆட்சி/மூல திரிகோணம்
சுக்ரன்-நட்பு
சனி-சமம்

ராசி வரிசையில் ஒன்பதாவது ராசி,பாக்ய ஸ்தான ராசி,உபய ராசி,ஆண் ராசி,நெருப்பு ராசி.

தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகள் மற்றும் விவேகம் மிக்கவர்கள். இவர்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் செல்வச் செழிப்பு அதிகம் பெற்று இருப்பார்கள்.

அழகான தோற்றம் கொண்டவர்கள். தாராள மனது கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பானவராவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். சுயநலம் அதிகம் கொண்டவர்கள். ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள்.

குடும்ப/களத்திர/சயன ஸ்தான அதிபதிகளாக சனிபகவான்/புதன்/செவ்வாய் அமைவதால் திருமண/குடும்ப வாழக்கை ஒரு மாதிரி மிக்ஸடாக இருக்கும்.

நான்காமாதியாக குரு பகவானே அமைவதால் மேற்படிப்பு நன்கு அமையும்.

புத்திர ஸ்தானாதிபதியாக செவ்வாய் அமைவதால் இவர்களின் நேர்மாறன குணாதியசங்களை கொண்ட பிள்ளைகள் அமைவாா்கள்.

பாக்யாதிபதியாக சூரியன் அமைவதால் தந்தை நன்கு இருப்பாா்.தந்தையின் ஆசியுண்டு,ஆனால் தந்தை வழி சொத்துக்கள் அடைவதில் சில தடைகள்/சிக்கல்கள் ஏற்படும்.

பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.

லக்ன சுபர்களாக குரு,செவ்வாய்,சூரியன் மற்றும் தொழில்/உத்யோக ஸ்தானாதிபதியாக புதன் அமைவதால் இவர்களின் காரகத்துவங்களில் ஒன்றை தொழிலாக/உத்யோக செய்தால் நல்ல மேன்மையுண்டு.

ஆசிரியர்,பேராசிரியர்,விஞ்ஞானி,அக்கவுண்ட்ஸ்&ஆடிட்டிங்,கணிப்பொறி,வங்கித்துறை,அரசாங்க வேலை போன்றவைகள் அமையும்.

நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களே தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்று கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.

குருபகவான் தனுசு,மேஷம்,சிம்மம்,கன்னியில் அமர்வது சிறப்பு.

குரு,செவ்வாய்,சூரியன்,புதன் ஒன்றாக இருப்பது,ஒருவருக்கொருவரை பாா்ப்பது,ஒருவருக்கொருவர் கேந்திரமடைவது சிறப்பானதாகும்.

சூரியன்/புதன் சேர்க்கை, பரிவர்த்தனை,கேந்திரமடைவது சிறந்த தர்மகர்மாதிபதியோகம்.இவர்கள் நிச்சயமாக ஆலயங்களையோ,அன்னதான தர்ம சத்திரங்கள்/அறக்கட்டளைகளை நிர்வாகிப்பாா்கள்.

இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாகலாம். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:3,9,1.
கிழமைகள்:வியாழன்,செவ்வாய்,ஞாயிறு
நிறங்கள்:மஞ்சள்,சிகப்பு.
திசைகள்:வடகிழக்கு,தெற்கு,கிழக்கு.
ரத்தினங்கள்:புஷ்பராகம்,பவளம்,மாணிக்கம்.

மனதிற்க்கு பிடித்த சன்யாசி/சித்தர்,சிவன்,முருகன்.இத்தெய்வங்களை தொடர்ந்து பக்தியுடன் வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூர் என்ற ஊரில் அமைந்துள்ள திரு.ரகோத்தமர் என்ற ஞானியின் மூல ப்ருந்தாவனத்தை முடிந்த போதெல்லாம் சென்று வணங்கிவந்தால் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெறலாம்.

வருடத்திற்கொருமுறை திருச்செந்தூர் சென்று முருக பெருமான தரிசிப்பதும் மிகச்சிறப்பானது.

இவை அனைத்தும் பொதுப்பலன்களே.

அவரவர் ஜன்ம ஜாதகம்,அதில் லக்னாதிபதியின் நிலை,ஜன்ம கரணம்,நித்யநாம யோகம்,திதி,நடப்பு தசா,நம் உழைப்பு,முயற்சி,தன்னம்பிக்கை,தாய்-தந்தையரை மதித்தல்,பெரியவர்களை வணங்குதல் இவைகளே நம் கர்மாவை,எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

சமூக வளைத்தளங்களில் மண்டிகிடக்கும் போலி/வியாபார ஜோதிடர்களிடம் ஏமாறாதீர்கள்.

எல்லாம் சுபமாகட்டும்.