Wednesday, August 14, 2019

சாய் பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நான் தன் ஸ்தூல உடலை பிரிந்தார்.

உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள். சீரடி மண்ணை மிதித்த வர்களின் கஷ்டங்கள் விலகுகிறது. அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன. அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது. ஆனந்தம் பொங்குகிறது. இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் சீரடி பாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.