💐
💐ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல்ப்படும் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கம், பலன்களை இங்கு பார்ப்போம்.
💐ஆவணி அவிட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆவணி அவிட்ட தினத்தில் பூணல் மாற்றும் முக்கிய நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உபநயனம் செய்துகொண்ட பிராமணர்கள் ஆடி அல்லது ஆவணி அவிட்ட நட்சத்திரத்தினோடு கூடிய பெளர்ணமி நாளில் கடைப்பிடிக்கப்படும் வழிபாடாகும். மேலும் ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் நாளாகும். விநாயகர் சதூர்த்தி தினத்தில் சாம வேதிகள் கொண்டாடுவார்கள்.
💐பொதுவாக பிராமணர்கள் 8 வயதான உடன் பூணல் அணிவது வழக்கம், சிலர் 5 வயதில் கூட அணிவிக்கின்றனர்.
இந்த பூணல் மாற்று நிகழ்வின் போது காயத்திரி மந்திரம் கூறுவது வழக்கம். காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் அதன் பயன்கள் குறித்து பார்போம்.
💐ஆவணி அவிட்டம் விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்...
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவதத் சவிதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்
💐காயத்ரி மந்திரத்தின் விளக்கம்
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கின்றோம்.
அந்த பரம்பொருள், நாங்கள் மேலான உண்மையை உணரும் அறிவை ஊக்குவிக்கட்டும்.
இந்த மந்திரம், ‘காயத்ரி’ எனும் ஒலியின் அளவைக் கொண்டு உருவானதால் இந்த மந்திரத்திற்கு “காயத்திரி மந்திரம்” என கூறப்படுகிறது.
💐இந்த காயத்திரி மந்திரம் மூல மந்திரமாக பார்க்கப்படுகின்றது. அதே போல் ஒவ்வொரு கடவுளுக்கும், அவரை தியானித்து, வணங்கும் பொருட்டு தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.
💐காயத்திரி மந்திரத்தின் பொருளை தான் பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் பாடல் எண் 153ல் பாடியுள்ளார்.
💐செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக
இப்படி பாரதியார் பாடியுள்ளார்.
💐காயத்ரி மந்திர பலன்கள்:
காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பதால் உடல் மற்றும் உள்ளம் பலப்படுகின்றது.
💐காயத்திரி என்றால் ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள். அதனால் இதை தினமும் சொல்லி வந்தால் அவர் இறைவனி அருளால் காப்பாற்றப்படுவார்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...