Monday, August 19, 2019

மனிதனின் கடைசி நேர ரகசியம்:


ஒருவர் இந்த உலகத்தை விட்டு விடைபெறும்போது அவர் மீண்டும் அந்த குடும்பத்தில் பிறப்பாரா அல்லது நேரடியாக அவரின் ஆத்மா தேவலோகம் போய்விடுமா என எப்படி கண்டுபிடிப்பது!

ஒருவரின் முற் பிறவி ரகசியங்களை ஜாதகத்தை வைத்து கண்டு பிடித்தாலும்,மறு பிறவி ரகசியத்தை அவர் உலகத்தைவிட்டு விடைபெறும் நட்சத்திரத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்.

நீங்களே பஞ்சாங்கத்தில் கடைசி பக்கம் பார்த்தால் அதில் தனிஷ்டா பஞ்சமி என இருக்கும்.

ஒருவர் பூமியை விட்டு செல்லும் போது அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ரோஹிணிய ,கார்த்திகை, உத்திரம்,
மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் விடைபெற்றால் அதை அடைப்பு என்பார்கள்!

அடைப்பு என்றால் அந்த ஆத்மா தேவலோகம் செல்லாமல் மீண்டும் பிறப்பெடுக்க ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு சில மாதங்கள் கணக்கில் காத்துக்கொண்டியிருக்கும்.அவர்கள் தங்கள் குடும்பத்திலே மீண்டும் பிறப்பார்கள் இதுதான் முக்கியமான ரகசியமாகும்.

சில பேர் இந்த நட்சத்திரங்களில் விடை பெற்றவர்களை ஆறுமாதம்,மூனு மாதம் பேய்,பிசாசு என முட்டாள்தனமாக கூறுவார்கள் இதல்லாம் மூடநம்பிக்கையாகும்.

பேய்,பிசாசு உண்மையன்றால் எதிரிகளால் உயிரிழந்த வீரர்களே பேயாக எதிரிகளை அழித்திருக்கலாம் அல்லவா!

இனி யாரும் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் விடபெற்றால் நல்லதுக்கே என நினைத்து கொள்ளுங்கள்!