Wednesday, August 14, 2019

செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும், `சௌபாக்ய விருட்சம்' என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளம் சேரும் என்பது ஐதீகம். இவற்றை அடிப்படையாகக் கொண்டே சிவன் கோயில்கள் பலவற்றில் செண்பக மரம் தல விருட்சமாக வளர்க்கப்படுகின்றன. திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் போன்ற சிவன் கோயில்களிலும் திருச்சேறை, திருநந்திபுர விண்ணகரம் ஆகிய திருமால் கோயில்களிலும் செண்பக மரங்கள் தல விருட்சமாக உள்ளன.