
பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள், ஹார்மோன் பிரச்னை ஆகியவை குழந்தை பேறுக்கு தடையாக உள்ளது. கழற்சி காயை பயன்படுத்தி மலட்டுத்தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகுப்பொடி, தேன்.கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளே இருக்கும் பருப்பை பொடி செய்து எடுக்கவும். 4 பங்கு கழற்சி காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
இந்த கலவையில் இருந்து தினமும் காலை, மாலை அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு வர நீர்கட்டிகள் சரியாகும். பெண் மலட்டுத்தன்மைக்கு நீர்கட்டிகள் கருப்பையில் தேங்கியிருப்பதும் ஒரு காரணமாக அமைகிறது. நாட்டு கடைகளில் கிடைக்கும் கழற்சி காய் குழந்தைபேறுக்கு மருந்தாகிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தண்ணீர் விட்டான் கிழங்கு, பனங்கற்கண்டு, பால்.அரை ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சவும்.
வடிகட்டியபின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை பெண்கள் குடித்துவர கர்ப்பப்பை, சினைப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும். தண்ணீர் விட்டான் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பாதாம் பருப்பை பயன்படுத்தி ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், பூசணி விதை, நாட்டு சர்க்கரை, பால். பாதாம் பருப்பு மற்றும் பூசணி விதைகளை வறுத்து பொடி செய்து எடுக்கவும்.
இந்த கலவை ஒரு ஸ்பூன், சிறிது நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இதை குடித்துவர கர்ப்பப்பை, சினப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும். அமுக்கரா கிழங்கை பயன்படுத்தி ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: அமுக்கரா கிழங்கு, பனங்கற்கண்டு, பால். ஒரு ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு எடுத்து கொண்டால் ஹார்மோன் குறைபாடு, மலட்டு தன்மை சரியாகும். அமுக்கரா கிழங்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.....