கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, December 6, 2019
பிறர் மனைவியிடம் காமம் கொள்ளாதே.
ஸ்ரீ சாயிபாபா, தன்னிடம் முழுமையாக சரணடைந்த பக்தர்களை, எப்போதும் கண்காணித்து வரும் காவல் தெய்வம்.
பாபாவின் பக்தரான ஸாடே என்பவர், தவறுதலாலும், அஜாக்கிரதையாலும் நடத்தை சரியில்லாத பெண் ஒருவள் வீட்டிற்குப் போய்விட்டார். அங்கே அவளுடன் தனியாக இருந்து தன் நடத்தை சீரழிந்து போய்விடக் கூடிய நிலமையை நெருங்கிவிட்டார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது திறந்தது. நிலைப்படியில் பாபா நிற்கிறார், ஸாடேக்கு ஏதோ சமிக்ஞகள் செய்கிறார். "என்ன! இவ்வளவு தூரம் என்னிடம் வந்துவிட்டு, நரகத்தில் விழப்பார்க்கிறாயே ! நல்ல செயல்தான்!" எனக் கண்டிப்பது போலிருந்தது. அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல ஸாடே மிகவும் வெட்கிப் போய், மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் அந்த பெண்ணின் வீட்டை விட்டு வெளியேறினார்.
"உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...