Friday, December 6, 2019

பிறர் மனைவியிடம் காமம் கொள்ளாதே.



ஸ்ரீ சாயிபாபா, தன்னிடம் முழுமையாக சரணடைந்த பக்தர்களை, எப்போதும் கண்காணித்து வரும் காவல் தெய்வம்.
பாபாவின் பக்தரான ஸாடே என்பவர், தவறுதலாலும், அஜாக்கிரதையாலும் நடத்தை சரியில்லாத பெண் ஒருவள் வீட்டிற்குப் போய்விட்டார். அங்கே அவளுடன் தனியாக இருந்து தன் நடத்தை சீரழிந்து போய்விடக் கூடிய நிலமையை நெருங்கிவிட்டார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது திறந்தது. நிலைப்படியில் பாபா நிற்கிறார், ஸாடேக்கு ஏதோ சமிக்ஞகள் செய்கிறார். "என்ன! இவ்வளவு தூரம் என்னிடம் வந்துவிட்டு, நரகத்தில் விழப்பார்க்கிறாயே ! நல்ல செயல்தான்!" எனக் கண்டிப்பது போலிருந்தது. அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல ஸாடே மிகவும் வெட்கிப் போய், மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் அந்த பெண்ணின் வீட்டை விட்டு வெளியேறினார்.

"உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.