Thursday, December 5, 2019

தாய்ப்பால்


உலகின் மிகவும் உன்னதமான உறவு, தாய் சேய் உறவு என்றால் மிகையல்ல...

தன் குழந்தைக்கு எத்தனை வயது ஆனாலும் அவனு(ளு)க்கு ஏதாவது துன்பம் வரப் போகிறது என்றால், அந்த துன்பம், அந்த குழந்தையை வந்தடையும் முன்பே அந்த தாய்க்கு தெரியும்...

இதற்கு உண்டான அடிப்படை காரணங்களில் ஒன்று தான் தாய்ப்பால்.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு எந்த மனநிலையில் தாய்ப்பால் கொடுக்கிறாளோ, அதை பொறுத்தே அந்த குழந்தையின் மனநிலை அமையும்...

இதை தான் பாரதி
வீரம் சுரப்பது தாய்ப்பாலடா என்று பாடினார்...

பீரம் பேணி பாரம் தாங்கும் என்றார் ஔவையார்...

தாய் அமைதியான சூழலில், குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு, பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒவ்வொரு பெரிய பேரூந்து நிலையத்திலும் ஏற்பாடு செய்து உள்ளது... (அதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு தாய்மார்களின் சார்பில் நன்றிகள் கோடி) (அது தற்போது எல்லா பேரூந்து நிலையத்திலும் நல்ல முறையில் இயங்குகிறதா? ஆண்டவனுக்கே வெளிச்சம்)

பிறந்தது முதல் கடைசி நிமிடம் வரை இந்த தாய்ப்பாலின் சக்தி தான் ஒருவருக்கு துணை நிற்கும் தடுப்பூசி...

3 வயது வரை தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு எந்த ஒரு தடுப்பூசியும் அவசியமில்லை...

தொலைக்காட்சி வரும் முன்பு வரை, பொதுவாக எல்லா தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பார்கள்... (பல கிராமங்களில் 5 வயது வரை பால் குடித்த குழந்தைகளும் உண்டு)
அப்படி தாய்ப்பால் குடித்து வளர்ந்த நம் தாத்தா பாட்டி தலைமுறையினர் பற்றி தனியாக வகுப்பு எடுக்கத் தேவை இல்லை...
அவர்களின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முறை, உணவு, சுற்றுப்புற சூழல் என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவர்கள் தாய்ப்பாலுக்கு கொடுத்த முக்கியத்துவம் தான் எல்லாவற்றுக்குமே அடிப்படை காரணம்...
நம் தாத்தா தலைமுறையில் தடுப்பூசி இல்லை ஆனால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், என்பதையும் நினைவில் கொள்க...

தாய்ப்பால் அதிகரித்திட

👉 பூண்டு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்...
👉 அம்மான் பச்சரிசி வேருடன் முழு செடியையும் அரைத்து பருகலாம்...
👉 வேர்கடலை உருண்டை, முருங்கை கீரை, சுரைக்காய்...

தாய்ப்பாலை எப்போது நிறுத்த வேண்டும்?
இந்த கேள்வி பரவலாக கேட்க துவங்கி உள்ளது...
அதிலும் பலர் அவரவர் அனுபவத்தில் பல பதில்கள் கொடுக்கிறார்கள்...
ஆனால், உங்கள் குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் போதும் என்று உங்கள் உடலுக்கு தெரிகிறதோ, அந்த நொடி முதல் உங்கள் உடலே தாய்ப்பால் சுரப்பதை நிறுத்தி விடும்
அதனால் தாய்ப்பால் சுரக்கும் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்...
அப்போது தான் உங்கள் குழந்தை இறுதி வரை ஆரோக்கியமாக வாழும்...

சாதாரணமாக ஒரு தலைவலி வந்தாலே நாம் எவ்வளவு துடி துடித்து போகிறோம்...

ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்று எடுக்கும் போது மீண்டும் பிறக்கிறாள்...

அந்த வலி சில நாட்களில் மறைந்தாலும்...
பின் நாட்களில் வேறொரு பிரச்சனையை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது...

இந்த வலி தெரியாமல் இருக்கவும்...
அந்த தாயின் இழந்த சத்துக்களை மீண்டும் கிடைக்கவும்...
அந்த காலத்தில் பாட்டி மார்கள் பல்வேறு உணவு பத்தியங்களை கடை பிடித்தார்கள்...
ஒத்தடம் கொடுத்தார்கள்

இப்போ அதை எல்லாம் காது கொடுத்து கேட்க கூட ஆட்கள் இல்லை...

ஆதலால்...

உங்கள் அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று, *அப்யங்கம் பொடிகிழி* சிகிச்சை 9 நாட்கள் பெறுங்கள்...

சுகப்பிரசவம் என்றால், இரண்டு வாரங்களில்...
சிசேரியன் என்றால், இரண்டு மாதங்களில் இந்த சிகிச்சை பெறலாம்...

இவ்வாறு சிகிச்சை பெறுவதால்...

இரத்த ஓட்டம் சீராகும்...
உடலில் உள்ள வலி சரியாகும்...
கர்ப்பப்பை உறுதியாகும்...
பால் கட்டி ஆவது தவிர்க்கப்படும்
(இந்த பால் கட்டியை தான் பிற்காலத்தில், கேன்சர் கட்டி என்று ஒரு கூட்டம் சொல்கிறது, இப்ப புரியுதா சமீப காலமாக எப்படி மார்பக புற்று நோய் அதிக தாய்மார்களுக்கு ஏற்படுகிறது என்று)

தாய்மார்களே...
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது எந்த நெகடீவ் சிந்தனையும் இல்லாமல் கொடுங்கள்...
அந்த சிந்தனை தான் உங்கள் குழந்தையின் சிந்தனையை தூண்டப் போகிறது...

வாடகை தாயிடம் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பெற்ற தாயின் மீது பாசம் 50% தான் இருக்கு (100%verified)...

நம் முன்னோர்கள் வழியில் பயணித்து ஆரோக்கியத்தை காத்திடுங்கள்...