கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, December 8, 2019
சிவன் சொத்து_குலநாசம் என்பார்கள் அதற்காக விளக்கம்!!
இந்து சமயத்தில் பெருமாள்,சிவன்,என இரு பெரும்தெய்வங்கள் உண்டு . இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள் ஆடைஆபரணங்கள்,
நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.
ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தறித்து.உடலில்சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசி கோலத்தில் இருப்பார்.
பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர்மீது பக்திகொண்டு மக்கள் வழிபட்டுஅவரிடம்கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.
ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவது தான் நிதர்சனம்.அவருடைய அலங்காரம்அப்படி.பெருமாளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.ஆனால் ஈசனை வணங்க ஈசனே
தேர்தெடுத்தால் மட்டுமே அவர்மீதுபக்திகொள்ள
முடியும்.
பெருமாளை வணங்குவது தகப்பனின் கையை மகன் பிடித்துச்செல்வதுபோலாகும்
தகப்பனின் கையை பிடித்துச்செல்லும் குழந்தை வழியில் ஏதாவது பள்ளம் வந்தால் கிழே விழுவதற்கு வாய்ப்பு அதிகம்.
ஈசனை வணங்குவது தகப்பன் குழந்தையின் கையை பிடிப்பதுபோலாகும்.
தகப்பனால் கரம்பற்றி அழைத்துச்செல்லப்படும் குழந்தை கீழேவிழுவதற்கோ
வழிதவறவோ வாய்ப்பே இல்லை.
சிவன் சொத்து எனப்படுவது திருநீரும்ருத்ராட்சமுமே.
இதை அணிந்தால் அவரது குலம் நாசமாகும், அதாவது அவரது பாவங்கள் அனைத்தும்நாசமாகும்.
அவரது மறுபிறப்பும் நாசமாகும்.
அவரால் அவரது வம்சமே பிறவிக்கடலில் இருந்து மீண்டு . பிறவாநிலையை அடைவர்.இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் இரகசியம்.
#ஓம்நமசிவாய
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...